Thursday, May 9, 2013

கிறிஸ்தவர்கள் பாலங்களைக் கட்ட அழைக்கப்பட்டுள்ளோம் சுவர்களைக் கட்டுவதற்கு அல்ல - திருத்தந்தை



மே,08,2013. கிறிஸ்தவர்கள் யாரையும் கண்டனம் செய்யாமல்அனைவரையும் இணைக்கும் பாலங்களைக் கட்ட அழைக்கப்பட்டுள்ளோம்சுவர்களைக் கட்டுவதற்கு அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதன் காலைத் திருப்பலியில் கூறினார்.
புனித மார்த்தா இல்லத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தில்வத்திக்கான் நீதித் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு திருப்பலி ஆற்றிய திருத்தந்தையுடன்கர்தினால் Francesco Coccopalmerio அவர்களும் கூட்டுத் திருப்பலி ஆற்றினார்.
அரயோப்பாகு மன்றத்தில் புனித பவுல் அடியார் இறைவனை எடுத்துரைத்ததைக் கூறும் திருத்தூதர் பணிகள் பகுதியை தன் மறையுரையின் மையப்பொருளாக்கிய திருத்தந்தையாரையும் புறக்கணிக்காமல்அனைவருக்கும் உண்மையை எடுத்துரைக்க வேண்டும் என்பதை பவுல் அடியார் கற்றுத் தருகிறார் என்று குறிப்பிட்டார்.
பாவிகள்வரிதண்டுவோர்திருச்சட்ட அறிஞர் என்று பலரையும் சந்தித்து உரையாடிய கிறிஸ்துவைப் போலவே,புனித பவுல் அடியாரும் செயல்பட்டார் என்பதைக் கூறியத் திருத்தந்தைஇதுவே கிறிஸ்துவர்களின் அழைப்பு என்றும் எடுத்துரைத்தார்.
உண்மை என்பது அனைவரையும் ஒருங்கிணைக்கும் தளமாக அமையவேண்டுமே தவிரமக்களைப் பிரிக்கும் கருவியாக இருக்க முடியாது என்பதை திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment